states

img

தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் கடும் நெரிசல் - 7 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துகூரில் நேற்று மாலை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வருகையின்போது அவ்விடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 7 பேர் வரை உயிரிழந்ததாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் வழங்குவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

 

;